சினிமா

Sridevi | ஸ்ரீதேவி குடும்பத்திற்கு இழப்பீடு - தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு

தந்தி டிவி

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்திற்கு நெடுஞ்சாலைத் துறை வழங்கிய இழப்பீடு குறித்து விசாரணை நடத்தக் கோரிய மனுவை 4 வாரங்களில் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது.

கிழக்கு கடற்கரைச் சாலையை விரிவுபடுத்த கையகப்படுத்தப்பட்ட ஆயிரத்து 420 சதுர அடி நிலத்திற்கு இழப்பீடாக, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் குடும்பத்திற்கு 1 கோடியே 87 ஆயிரத்து 183 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்றும் கூறி, சென்னையைச் சேர்ந்த சிவகாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, தமிழக அரசு 4 வாரங்களில் பரிசீலிக்கும்படி உத்தரவிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்