Actor Soori | Mandaadi | முதன்முறையாக தாயை மேடையேற்றிய சூரி.. கலங்கடித்த எமோஷனல் தருணம்
நடிகர் சூரி நடித்துள்ள ‘மண்டாடி“ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், முதல் முறையாக தனது தாயாரை மேடையேற்றினார். அப்போது பேசிய அவரது தாயார், “சாப்பிட ஒன்றுமில்லாமல், குழாயைத் திறந்து தண்ணியைக் குடித்துவிட்டுப் படுத்தோம், அப்போது பசி தாங்க முடியாமல் சூரி அழுததை இப்போதும் மறக்க முடியவில்லை" என உருக்கமாக தெரிவித்தார். அதேபோல் நடிகர் சூரி தனது தாயார் குறித்து பேசுகையில், அம்மாதான் தனக்கு எல்லாமே என்றும், தனது சாமி என்றும்; வாழ்க்கையை அவர் கற்றுக்கொடுத்ததால்தான், தான் இந்த இடத்தில் இருப்பதாக நெகிழ்ச்சியுடன் பேசினார்.