அவரது இசையில், 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடலை சிவகார்த்திகேயனின் மகள் ஆராதானா பாடியுள்ளார். எந்த வித தயக்கமும் இல்லாமல், மிகவும் அழகாக தந்தையுடன் சேர்ந்து அவர் பாடும் காட்சி காண்போரை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக பாடலை பாட தயாராகும் விதமும் நான்கரை வயதே ஆராதனா 'ஆஹான்' சொல்வதற்கும் பல பேர் ரசிகர்களாக மாறிவிட்டனர். அப்பாவிற்குக் செல்லபிள்ளையாக இருக்கும் எல்லா மகள்களுக்கும் இந்த பாடலை சமர்ப்பிப்பதாக சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.