மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணித்தின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ரசிகர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.பி. நினைவிடத்தில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பண்ணை வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு ரசிகர்கள் மரியாதை செலுத்தினர்.