"அரசன்" படப்பிடிப்புக்கு இடையே மதுரையில் நடிகர் சிம்பு ரசிகர்களை சந்தித்தார். வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் அரசன் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் நடந்த நிலையில், ஷூட்டிங்கை முடித்து விட்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் சிம்பு சென்னை புறப்பட்டார். முன்னதாக அவரது ரசிகர்களை மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு வரவழைத்த சிம்பு, அறுசுவை விருந்தளித்ததுடன் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்து உற்சாகப்படுத்தினார்.