நடிகர் சிம்பு, அடுத்ததாக, இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணைந்து 'மாநாடு' படத்தில் நடிக்க உள்ளார். இது குறித்து ஏற்கனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிம்பு பிறந்த நாளான, அடுத்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தமது சமூக வலை தள பக்கத்தில், காதலும், ஆக்சனும், கலந்த கலவையாக, 'மாநாடு' உருவாகப் போகிறது என குறிப்பிட்டுள்ளார்.