வேட்பாளர்களை பிடிக்க கோடிகள்?.. ``நான் ஏன் மறைக்கணும்’’ - பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை கட்சியில் சேர்ந்தால் ஏன் மறைக்க வேண்டும்? - ஸ்வேதா மேனன் கேள்வி தான் ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்திருந்தால் அதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என நடிகை ஸ்வேதா மேனன் கூறியுள்ளார்.... கேரள நடிகர்கள் அமைப்பான 'அம்மா' அமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த நடிகை ஸ்வேதா மேனன், ஆவேசமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் கட்சி வேட்பாளர்களைப் பிடிக்கத் தனக்குக் கோடிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் தகவலின் மர்மம் என்ன என்று நடிகை ஸ்வேதா மேனன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஹேமா கமிட்டி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீண்டும் 'அம்மா' அமைப்பின் தலைமைக்கு வர முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், அமைப்பில் மதத்தையும் அரசியலையும் நுழைக்கக் கூடாது என்றும், யாருக்கும் அடிபணியாமல் சட்டப்பூர்வமாகப் போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.