விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு ஆதரவாக வீடியோ பதிவிட்ட இளைஞர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், வன்முறையை தூண்டும் வார்த்தைகளால் அரசை விமர்சித்து, அந்த இளைஞர்கள் பேசும் காட்சிகள், இணைய தளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், அவர்களை பற்றிய தகவல்களை சேகரிப்பதில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இரண்டு பேரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள், மத்திய குற்றப்பிரிவு மற்றும் கணினி குற்றப்பிரிவுக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் அறிவித்துள்ளனர்.