ரோபோ சங்கரின் படத்தை கருப்பு அரிசியில் வரைந்த ஓவியர்
மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் படத்தை தத்ரூபமாக கருப்பு அரிசியில் வரைந்து ஓவியர் அஞ்சலி செலுத்தியுள்ளார் . திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஓவியர் ஹரிஷ் என்பவர் கருணாநிதி, ஜெயலலிதா, அண்ணா, அம்பேத்கர், பெரியார், விஜயகாந்த், விஜய் உள்ளிட்ட தலைவர்களின் படத்தை கருப்பு அரிசியில் வரைந்து பிரபலமானார். இவர் ரோபோ சங்கரின் மறைவையடுத்து கருப்பு அரிசியில் ரோபோ சங்கரின் படத்தை தத்ரூபாக வரைந்து அஞ்சலி செலுத்தினார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.