தமிழ் சினிமாவில், நம் யதார்த்த வாழ்வின் அழகியல் பிரதிபலிப்பதில்லை என்று திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், யதார்த்த வாழ்வை மீறி பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் எடுத்துச் செல்லும் ஹீரோக்களாக நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் மாறிவிட்டார்கள் என்றும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.