சினிமா

வாட்ஸ்-அப் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயற்சி - நடிகை ஜெயலட்சுமி கொடுத்த புகாரில் இருவர் கைது

நடிகைகள் சிலரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வாட்ஸ்-அப் மூலம் வலை விரித்த கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் திரைப்படங்களிலும், சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருக்கு வாட்ஸ் அப் மூலம் ரிலேஷன்ஷிப், டேட்டிங் சர்வீஸ் என்ற பெயரில் இரண்டு முறை மெசேஜ் வந்துள்ளது.

அதில் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்றும், விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து ஜெயலட்சுமி, சக தோழிகளை தொடர்பு கொண்டு விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நடிகைகள் சிலரின் பேஸ்புக் அக்கௌண்டில் இருந்து அவர்களது செல்போன் மற்றும் புகைப்படங்களை எடுத்த ஒரு கும்பல், வாட்ஸ் அப் மூலம் அதே மெசேஜை தனித்தனியாக அனுப்பியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை