தொடக்க காலத்தில் மேடை நாடகங்களிலும், மிமிக்ரி கலைஞராகவும் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய சலீம் குமார், 1997-ல் "இஷ்டமானு நூறு வட்டம்" என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். கடந்த 2010ல் வெளியான "ஆதாமிண்டே மகன் அபு" படத்தில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சலீம் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.