சினிமா

நடிகை வனிதா மீது முன்னாள் கணவர் புகார் எதிரொலி : தனியார் டிவி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ்

மகளை கடத்திய புகாரில், நடிகை வனிதாவை கைது செய்ய, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி அரங்கத்துக்குள் போலீஸ் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நடிகை வனிதா விஜயகுமாரின் 2வது கணவர் அனந்தராஜன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2007ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், 2009ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். அவர்களுக்கு ஜெனிதா என்ற ஒரு மகள் உண்டு. தந்தை அனந்தராஜனின் பாதுகாப்பில் இருந்த ஜெனிதாவை, பள்ளியில் இருந்து, வனிதா கடத்தியதாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதுமுதல், வனிதா தலைமறைவாக இருந்ததாக கூறும் அனந்தராஜன், தனியார் டிவி நிகழ்ச்சியில் வனிதா பங்கேற்றுள்ளது தெரிந்தவுடன், போலீசாருடன் தமிழகம் வந்ததாகவும் கூறினார். தெலுங்கானா போலீசாருடன் தமிழகம் வந்த அவர், நசரத்பேட்டை போலீசார் உதவியுடன், தனியார் டிவி நிகழ்ச்சி நடைபெறும் வீட்டுக்குள் சென்றுள்ளார். கடும் விவாதமும், விசாரணையும் நடைபெற்று வருகிறது. விரைவில், அவர் வனிதா விஜயகுமார் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை