சினிமா

#JUSTIN || `12 சவரன் காணவில்லை' நேற்று புகார் கொடுத்து விட்டு இன்று பார்த்திபன் வைத்த டுவிஸ்ட்

தந்தி டிவி

அலுவலகத்தில் இருந்த தங்க நகைகள் மாயமானதாக நடிகர் பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார்.

அலுவலக ஊழியரிடம் போலீசார் விசாரணை.

சென்னை நந்தனம் விரிவாக்கம் 7- வது தெருவில் நடிகர் பார்த்திபனின் வீடு அமைந்துள்ளது. வீட்டின் கீழ் தளத்தில் அவரது அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நடிகர் பார்த்திபன் கடந்த 6 ஆம் தேதி சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், அலுவலக அறையில் கைப்பை வைத்திருந்ததாகவும், அதில் 12 சவரன் தங்க நகை வைத்திருந்ததாகவும் அந்த பை காணவில்லை எனவும் புகாரில் தெரிவித்தார். இதையடுத்து சைதாப்பேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

அலுவலகத்தில் பணியாற்றி வரும் 6 ஊழியர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது உதவியாளராக வேலை பார்த்த கிருஷ்ணா காந்த் என்பவர் நகை வீட்டிலேயே இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனை வந்து கொடுத்ததால் போலீசார் ஊழியர் கிருஷ்ணகாந்திடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Rahul Gandhi | "கட்சியில் இனி இடமில்லை" - ராகுல்காந்தி எச்சரிக்கை

Breaking | TN Rains | Rain Alert | கொட்டும் கனமழை | தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலர்ட்

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்