நடிகை ராதிகா நடிச்ச தாய்கிழவி திரைப்படம் உலகளவில மாபெரும் வசூல ஈட்டிருக்கு..
சிவகார்த்திகேயன் தயாரிப்புல, இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்துல உருவான இந்த படம் பிப்ரவரி 27ஆம் தேதி வெளியானது....
வெளியான முதல் மூன்று நாட்களிலேயே 22 கோடிக்கு மேல் வசூல் செய்ததா படக்குழு தெரிவிச்சது.
இதையடுத்து படம் வெளியான 10 நாட்களிலேயே உலகளவுல 50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதா தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமா அறிவிச்சுருக்கு...
மேலும் மகளிர் தினத்தன்று படத்துல பெண்கள் குறித்து ராதிகா பேசும் வசனம் சமூக வலைதளங்கள்ல அதிகம் பகிரப்பட்டதும் படக்குழுவ மேலும் உற்சாகப்படுத்திருக்கு... விரைவுல படத்தின் வெற்றி விழாவும் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.