சினிமா

"வீடு வாங்க சேமித்து வைத்த பணம்"; "1800 மாணவர்களின் கல்விக்காக செலவிட உள்ளேன்" - நடிகர் விஷால்

சொந்த வீடு வாங்குவதற்காக சேமித்து வைத்துள்ள பணத்தை ஆயிரத்து 800 மாணவர்களின் கல்விக்காக செலவிட உள்ளதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சொந்த வீடு வாங்குவதற்காக சேமித்து வைத்துள்ள பணத்தை ஆயிரத்து 800 மாணவர்களின் கல்விக்காக செலவிட உள்ளதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். கர்நாடக திரைப்பட சம்மேளனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித் ராஜ்குமாரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஷால் மேடையில் பேசிய போது இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், தனது குடும்பத்திற்கு கூட தெரியாமல் புனித் ராஜ்குமார் பல்வேறு தரப்பினருக்கும் உதவிகளை செய்து வந்துள்ளார். தற்போது வரை தனக்கு சொந்த வீடு இல்லை என கூறிய விஷால், வீடு வாங்க சேமித்து வைத்துள்ள பணத்தை, புனித் ராஜ்குமார் தத்தெடுத்த 1800 குழந்தைகளின் கல்விக்காக அர்ப்பணிப்பதாக கூறினார். மேலும் நடிகைகள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினருமே தன்னால் முடிந்த உதவிகளை இயலாதவர்களுக்கு செய்ய வேண்டும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்தார். அதுவே மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் ஆத்மாவை சந்தோஷத்தில் ஆழ்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை