சினிமா

"நாட்டின் பல பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பும் முயற்சி மீ டூ" - கபிலன் வைரமுத்து

மீ டூ" பிரச்சினையை பிரம்மாண்டமான பொழுது போக்காக சித்தரித்து, நாட்டில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் திசை திருப்பும் முயற்சி என கபிலன் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி

* "மீ டூ" பிரச்சினையை பிரம்மாண்டமான பொழுது போக்காக சித்தரித்து, நாட்டில் நிகழும் பல்வேறு பிரச்சனைகளில் இருந்து முற்றிலும் திசை திருப்பும் முயற்சிகளுக்கு யாரும் இடம் கொடுக்க வேண்டாம் என்று பாடலாசிரியரும், கவிஞர் வைரமுத்துவின் மகனுமான கபிலன் வைரமுத்து கேட்டுக்கொண்டுள்ளார்.

* இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எந்த ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் ஆண், பெண்ணின் மீதும் பெண் ஆணின் மீதும் பழி சொல்லும் போக்கு மிகவும் அபாயகரமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

* தனது தந்தையின் பெருமைகளை அழுக்குப்படுத்த நினைக்கிறவர்கள் அனுதாபத்துக்கு உரியவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

* வைரமுத்து மீது சுமத்தப்படும் பழிகளுக்கு எத்தகைய காரணம் இருப்பினும், அவை சட்டரீதியாக பதிவாகட்டும், உண்மை வெல்லட்டும் என்று கபிலன் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்