தமிழக முதல்வர் விஜய்யுடன் இணைந்து அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் நடித்ததற்குத் தாம் மிகவும் அதிர்ஷ்டசாலியாகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நபராகவும் உணர்வதாக நடிகை மமிதா பைஜு தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், தாம் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகை என்றும் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், படப்பிடிப்புத் தளத்தில் என்னிடம் மிகவும் இயல்பாகவும் நட்பாகவும் பேசுவார் என்றும் கூறியுள்ளார். படம் வெளியான பிறகும் முதல்வர் விஜய்யுடன் தாம் ஓரிரு முறை பேசிக் கொண்டதாகவும், அவரை எளிதில் அணுகிப் பேச முடியும் என்பதோடு, அவருடன் திரையைப் பகிர்ந்து கொண்ட வாய்ப்பு தமக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
#mamithabaiju #cmvijay #jananayagan