சினிமா

பிரபல இயக்குநர் மகேந்திரன் காலமானார்...

பிரபல இயக்குநர் மகேந்திரன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

தந்தி டிவி

சமீபத்தில், தெறி, நிமிர், பேட்ட ஆகிய படங்களில் நடிகராகவும் தன்னை நிரூபித்திருந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக, கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்த அவ​ர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணி அளவில் இயக்குநர் மகேந்திரன் காலமானார். அவரது உடல், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மகேந்திரனின் இறுதிச் சடங்குகள், இன்று மாலை நான்கு மணியளவில் சென்னை மந்தைவெளி மயானத்தில் நடைபெற உள்ளதாக அவரது மகன் ஜான் தெரிவித்துள்ளார்.

மகேந்திரன் உடலுக்கு ரஜினிகாந்த் மரியாதை

மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். இதுபோல, இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரும் மறைந்த மகேந்திரன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். மகேந்திரன் உடலை பார்த்து, இயக்குநர் பாரதிராஜா கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மகேந்திரனை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் எம்.ஜி.ஆர்

இயக்குநர் மகேந்திரன் 1939ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பிறந்தார். இவரது தந்தை ஜோசப் செல்லையா, தாயார் மனோன்மணி. தந்தை ஜோசப் ஆசிரியராக பணிபுரிந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்" பயின்ற இவர், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பொருளாதாரத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரி நாட்களிலேயே நாடகங்களில் ஈடுபாட்டுடன் இருந்தவர், மகேந்திரன். கல்லூரி விழாவில் அவரது பேச்சை கேட்ட எம்.ஜி.ஆர், அவரை அழைத்து பாராட்டினார். சென்னையில் அவர் பத்திரிகையாளராக இருந்த போது, எம்.ஜி.ஆர் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். "பொன்னியின் செல்வன்" நாவலை திரைப்படமாக்க இயக்க நினைத்த எம்ஜிஆர், அதற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதும் வாய்ப்பை மகேந்திரனுக்கு அளித்தார்.

ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தப்படம் எடுக்க முடியாமல் போனது. இதனையடுத்து "காஞ்சித் தலைவன்'' படத்தின் இயக்குநர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குனராக மகேந்திரனை எம்.ஜி.ஆர். சேர்த்துவிட்டார். இதைத்தொடர்ந்து 1966ஆம் ஆண்டு, நாம் மூவர் என்ற படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார், மகேந்திரன்... தொடர்ந்து பணக்காரப்பிள்ளை, நிறைகுடம், தங்கப்பதக்கம், ஆடு புலி ஆட்டம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை, வசனங்களை எழுதியுள்ளார். 1978ஆம் ஆண்டு முள்ளும் மலரும் படத்தின் மூலம் இயக்குநராக மகேந்திரன் அறிமுகமானார். நடிகர் ரஜினிகாந்த்தை வேறு கோணத்தில் காட்டியவர் மகேந்திரன். புதுமைப்பித்தனின் சிறுகதையை தழுவி உதிரிப்பூக்கள் படத்தை எடுத்தார். இதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து, காளி, ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கி எதார்த்த சினிமாவின் இயக்குநர் எனப் பெயர் பெற்றவர். நெஞ்சத்தைக் கிள்ளாதே படம் 3 தேசிய விருதுகளை பெற்றது.

இவரின் படங்கள் இன்றளவும் புதிய இயக்குநர்களுக்கு பாடங்களாக உள்ளது. இவை அல்லாமல் "போஸ்ட் மார்டம்" என்ற தலைப்பில் சினிமா விமர்சனம் எழுதும் பணியிலும் 3 ஆண்டு காலம் துக்ளக்கில் பணிபுரிந்தார். சமீபத்தில் தெறி, நிமிர், பேட்ட உள்ளிட்ட படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையும் நிரூபித்தவர். எதார்த்த சினிமாக்களின் இயக்குநர் மகேந்திரன்...79 வயதான இவர் சிறுநீரக பிரச்சினைக்காக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.

மகேந்திரனை சினிமாவுக்கு அழைத்து வந்தவர் எம்.ஜி.ஆர்

இயக்குநர் மகேந்திரன் 1939ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் பிறந்தார். இவரது தந்தை ஜோசப் செல்லையா, தாயார் மனோன்மணி. தந்தை ஜோசப் ஆசிரியராக பணிபுரிந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் "இண்டர்மீடியட்" பயின்ற இவர், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பொருளாதாரத்தில் தனது பட்டப்படிப்பை முடித்தார். கல்லூரி நாட்களிலேயே நாடகங்களில் ஈடுபாட்டுடன் இருந்தவர், மகேந்திரன். கல்லூரி விழாவில் அவரது பேச்சை கேட்ட எம்.ஜி.ஆர், அவரை அழைத்து பாராட்டினார். சென்னையில் அவர் பத்திரிகையாளராக இருந்த போது, எம்.ஜி.ஆர் மூலம் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார். "பொன்னியின் செல்வன்" நாவலை திரைப்படமாக்க இயக்க நினைத்த எம்ஜிஆர், அதற்கு திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதும் வாய்ப்பை மகேந்திரனுக்கு அளித்தார்.

இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி

திரைத்துறையில் பல சாதனைகளை படைத்தவர் மகேந்திரன் - பார்த்திபன்

இயக்குநர் மகேந்திரனுக்கு நடிகர் ராஜேஷ் இரங்கல்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி