Kamalhaasan | அவசர அழைப்பு.. கமல் வெளியிட்ட அறிக்கை
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்தியத் திரைத்துறையைப் பாதுகாக்க நடிகர் கமல்ஹாசன் அவசர அழைப்பு விடுத்துள்ளார். 'ஆடம்பரத்தைத் தவிர்த்து, அடிமட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தைப் பாதுகாக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ள அவர், தேவையற்ற வெளிநாட்டுப் படப்பிடிப்புகளைத் தவிர்த்து இந்தியாவிலேயே படமாக்க அறிவுறுத்தியுள்ளார். பிரம்மாண்டம் என்பது அதிக செலவில் இல்லை, முறையான திட்டமிடலிலேயே உள்ளது எனக் குறிப்பிட்ட கமல், திரைத்துறையின் அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து இந்தப் பொருளாதாரச் சிக்கலை எதிர்கொள்ள வேண்டும் எனத் தனது அறிக்கையில் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.