சினிமா

ஜானி மாஸ்டரின் செய்யக்கூடாத செயல்.. தேசிய விருது ரத்து

தந்தி டிவி

போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேசிய விருது ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடன இயக்குனரான ஜானி மாஸ்டருக்கு, திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனிடையே ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகாரளித்த 21 வயது இளம்பெண், 16 வயது முதல் பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஜானி மாஸ்டர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து வரும் 8-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய விருது விழாவில் பங்கேற்க, ஜானி மாஸ்டருக்கு வரும் 10-ஆம் தேதி வரை, நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்நிலையில் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த தேசிய திரைப்பட விருது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜானி மாஸ்டருக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய திரைப்பட விழா அழைப்பிதழும், திரும்பப் பெறப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை