தமது தாய் ஸ்ரீதேவியின் ஆடைகளைக் கண்டு, ஜான்வி மனம் நெகிழ்ந்து கண்ணீர் விட்டு அழுகிறார். அவரது நினைவாக அந்த ஆடைகளை பயன்படுத்தவும் செய்கிறார். ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு, அவரது நடிப்பு சாதனையை பாராட்டி விருது அறிவிக்கப்பட்டது. அதை பெற்றுக்கொள்வதற்காக சென்ற ஜான்வி, தாய் ஸ்ரீதேவியின் சேலையை உடுத்திச் சென்றார். தொடர்ந்து, தாயின் ஆடைகளை அணிந்து அவர் வலம் வருகிறார். ஜான்வி நடித்த 'தடக்' இந்தி படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றது. அடுத்து கரண்ஜோகரின் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.