#rukminivasanth #kanthara ருக்மணி வசந்த் கடும் கண்டனம் பொதுநிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நடிகைகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மீண்டும் மீண்டும் ஒழுக்கமற்ற கோணங்களில் படம் பிடிக்கப்பட்டு வருவதாக காந்தாரா பட நடிகைகள் கொந்தளித்துள்ளனர். காந்தாரா படத்தில் நடித்த பிரபலமான நடிகைகள் சப்தமி கவுடா, ருக்மணி வசந்த் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இது குறித்த கண்டனங்களை பதிவிட்டுள்ளனர். தேவையற்ற முறையில் ஜூம் செய்து, தங்கள் பணியை விட தங்களது உடலை மையப்படுத்தும் வகையிலான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரப்பப்படுவதாகவும் இந்த மரியாதைக்கேடான செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். "