சினிமா

நடிகை ஹனி ரோஸ் புகார் - பிரபல தொழிலதிபர் மீது வழக்குப்பதிவு

தந்தி டிவி

தமிழில் 'சிங்கம் புலி, பட்டாம்பூச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். தொடர்ச்சியாக சோசியல் மீடியாவில் சைபர் தாக்குதலை சந்தித்து வரும் ஹனி ரோஸ், ஞாயிற்றுக்கிழமை எர்ணாகுளம் காவல் நிலையத்தில் 30 பேர் மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செல்வாக்கு மிக்க, வசதி படைத்த ஒருவர், தன்னை தொடர்ந்து பொதுவெளியில் களங்கப்படுத்தி வருவதாக ஹனிரோஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அவர் அளித்த புகார் அடிப்படையில், தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போதுள்ள 30 வழக்குகள் தவிர, ஆபாசமாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது உடனடியாக ஜாமினில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீசார் முடிவெடுத்துள்ளனர். போலி சுயவிவரங்கள் குறித்த தகவல்கள் கேட்டு மெட்டா நிறுவனத்தை அணுகியுள்ள போலீசார், மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்