சினிமா

சர்கார் விவகாரம் : முருகதாஸை கைது செய்ய கூடாது என்ற தடை நீட்டிப்பு

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

தந்தி டிவி
சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது. விஜய் நடிப்பில் தீபாவளிக்கு திரைக்கு வந்த சர்கார் படத்தில், அரசின் இலவசத் திட்டங்களை விமர்சித்துள்ளதாக குற்றம்சாட்டி, வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏ.ஆர். முருகதாஸ் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இந்நிலையில், முன்ஜாமீன் கோரி ஏ.ஆர். முருகதாஸ் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை கைது செய்வதற்கான தடையை, டிசம்பர் 20-ஆம் தேதி வரை நீட்டித்தது. வழக்கு விசாரணையையும் அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்