சினிமா

25 வயது வரை எனக்கு தற்கொலை எண்ணம் இருந்தது - இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான்

25 வயது வரை தனக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கையை, 'கனவு குறிப்புகள்' என்ற பெயரில், கிருஷ்ணா திரிலோக் என்பவர் புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா, மும்பையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான, 25 வயது வரை தனக்கு தற்கொலை எண்ணம் இருந்ததாகவும், தந்தையை இழந்ததால் அப்படிப்பட்ட எண்ணம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தந்தை இறந்துவிட்டதால், அதிக திரைப்படங்களில் வேலை செயவதைத் தவிர்த்து விட்டதாகவும், 35 திரைப்படங்களில் இரண்டை மட்டுமே தேர்வு செய்ததாகவும் ரஹ்மான் தெரிவித்தார். மரணம் என்பது, நிரந்தரமானது என்பதால், எல்லாவற்றிற்கும் முடிவு இருக்கும் போது ஏன் பயம் கொள்ள வேண்டும் என நினைத்ததாகவும் தன் வாழ்க்கையில் உருவான கடினமான சூழ்நிலைகள் பல, தனக்கு தைரியத்தை வரவழைத்ததாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை