ஆபாச படங்களில் நடித்ததாக புகார் - நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு
ஆபாச திரைப்படங்களில் நடித்து பணம் சம்பாதித்ததாக எழுந்த புகாரில் நடிகை ஸ்வேதா மேனன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர், எர்ணாகுளம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஸ்வேதா மேனன் ஆபாச படங்களில் நடித்ததாக பலேரி மாணிக்கம், களிமண்ணு உள்ளிட்ட மலையாள திரைப்படங்களையும், கருத்தடை ஆணுறைக்கான விளம்பரத்தையும் புகாரில் மேற்கோள் காட்டியுள்ளார். மனுவை பரிசிலித்து நீதிமன்றம் அறிவுறுத்தியதன்பேரில் எர்ணாகுளம் போலீசார், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.