ஆஸ்கர் விருதுக்கு பரித்துரைக்க கூடிய அத்தனை தகுதியையும் பெற்ற திரைப்படம் ஒத்த செருப்பு என்று இயக்குனர் ஆர்.கே செல்வமணி தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட சம்மேளனத் தலைவரான அவர், சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அரசு வழங்கு திரைப்பட விருதுகளில் வெளிப்படை தன்மை வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.