பாகுபலி உள்ளிட்ட , படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ராஜமவுலி, ஆர்.ஆர்.ஆர்' - இரத்தம் ரணம் ரெளத்திரம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளதாக, ராஜமவுலி தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இம்முறை இன்னும் கூடுதலாக உழைக்க போகிறோம் என கூறி, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த ஆர்.ஆர்.ஆர் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.