சினிமா

'மிஸ் தமிழ்நாடு' போட்டி நடத்தி மோசடி : நடிகை மீரா மிதுன் மீது புகார்

'மிஸ் தமிழ்நாடு' அழகிப் போட்டி நடத்தி மோசடி செய்ததாக நடிகை மீரா மிதுன் மீது சென்னை காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

தந்தி டிவி

கடந்த 30 ஆம் தேதி நடிகையும் மாடல் அழகியுமான மீரா மிதுன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் 'மிஸ் சவுத் இந்தியா' நிறுவன நிர்வாக இயக்குனர் அஜித் ரவி மற்றும் ஜோ மைக்கில் பிரவீன் ஆகியோர் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறியிருந்தார். அன்றைய தினமே தென்னிந்திய அழகிப் பட்டம் மீரா மிதுனிடமிருந்து பறிக்கப்பட்டது.

இந்நிலையில், 'மிஸ் தமிழ்நாடு' அழகி போட்டி நடத்த அஜித் மற்றும் பிரவீன் ஆகியோருக்கே உரிமம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அதனை தவறாக சிலர் பயன்படுத்துவதாகவும் மிஸ் சவுத் இந்தியா நிர்வாகம் விளக்கமளித்தது. இதன் தொடர்ச்சியாக, 'மிஸ் தமிழ்நாடு' போட்டி நடத்துவதாக கூறி, மாடல் அழகிகள் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்களிடம் நடிகை மீரா மிதுன் பண மோசடி செய்து விட்டதாக சென்னையில் தேனாம்பேட்டை மற்றும் எண்ணூர் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ