தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ள இயக்குனர் சேரன், கமல்ஹாசன் அனுமதித்தால் படத்தை இயக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜய் சேதுபதியை வைத்து விரைவில் மாஸ் படம் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பேனர் வைப்பதை தவிர்க்குமாறு நடிகர்கள் கூறியிருப்பது போல் ரசிகர்கள் நடந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.