சினிமா

விஷாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..! வெளியான பரபரப்பு `X ' பதிவு

தந்தி டிவி

மும்பை சென்சார் போர்டு மீது அளித்த லஞ்ச புகார் குறித்து நடிகர் விஷாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் சென்சார் செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ஆறரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் பரபரப்பு புகார் அளித்தார். இந்த வழக்கை, சிபிஐ விசாரித்து வரும் நிலையில், மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் மற்றும் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் நேரில் ஆஜராகினர். ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், குரல் பரிசோதனை அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றதாக குறிப்பிட்ட விஷால், வாழ்நாளில் இதுபோன்ற அலுவலகத்திற்கு எல்லாம் செல்வேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை என X தளத்தில் பதிவிட்டார். சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும், ஊழலுக்கு எதிராக போராட உள்ளதாக விஷால் சூளுரைத்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"