சினிமா

விஷாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..! வெளியான பரபரப்பு `X ' பதிவு

தந்தி டிவி

மும்பை சென்சார் போர்டு மீது அளித்த லஞ்ச புகார் குறித்து நடிகர் விஷாலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மார்க் ஆண்டனி படத்தை இந்தியில் சென்சார் செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் ஆறரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக நடிகர் விஷால் பரபரப்பு புகார் அளித்தார். இந்த வழக்கை, சிபிஐ விசாரித்து வரும் நிலையில், மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் மற்றும் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் நேரில் ஆஜராகினர். ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், குரல் பரிசோதனை அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றதாக குறிப்பிட்ட விஷால், வாழ்நாளில் இதுபோன்ற அலுவலகத்திற்கு எல்லாம் செல்வேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை என X தளத்தில் பதிவிட்டார். சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும், ஊழலுக்கு எதிராக போராட உள்ளதாக விஷால் சூளுரைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்