சினிமா

சல்மான் கானுக்கு எதிரான புகார் : நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பத்திரிகையாளர்

பாலிவுடன் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக பத்திரிகையாளர் ஒருவர் குற்றவியல் புகார் தெரிவித்து, அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தந்தி டிவி

பாலிவுடன் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக பத்திரிகையாளர் ஒருவர் குற்றவியல் புகார் தெரிவித்து, அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அசோக் எஸ்.பாண்டே, தான் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி காரில் வந்த போது, அந்த வழியாக வந்த சல்மான் கானை படம் பிடிக்க முயன்றதாகவும், சல்மான் மறுத்ததும் அவரது பாதுகாவலர்கள் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்தார். மேலும், சல்மான் கானும் தன்னை தாக்கி, தனது செல்போனை உடைக்க முயன்றதாக அசோக் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், வழக்கு தொடர்ந்ததாக அவர் கூறினார். இந்நிலையில் வழக்கை ஜூலை 12ஆம் தேதி விசாரிப்பதாக அந்தேரி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு