சினிமா

சல்மான் கானுக்கு எதிரான புகார் : நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பத்திரிகையாளர்

பாலிவுடன் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக பத்திரிகையாளர் ஒருவர் குற்றவியல் புகார் தெரிவித்து, அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தந்தி டிவி

பாலிவுடன் நடிகர் சல்மான் கானுக்கு எதிராக பத்திரிகையாளர் ஒருவர் குற்றவியல் புகார் தெரிவித்து, அந்தேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அசோக் எஸ்.பாண்டே, தான் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி காரில் வந்த போது, அந்த வழியாக வந்த சல்மான் கானை படம் பிடிக்க முயன்றதாகவும், சல்மான் மறுத்ததும் அவரது பாதுகாவலர்கள் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்தார். மேலும், சல்மான் கானும் தன்னை தாக்கி, தனது செல்போனை உடைக்க முயன்றதாக அசோக் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், வழக்கு தொடர்ந்ததாக அவர் கூறினார். இந்நிலையில் வழக்கை ஜூலை 12ஆம் தேதி விசாரிப்பதாக அந்தேரி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை