சினிமா

தமன்னா முதல் இராணுவ வீரர் வரை.. நாடெங்கும் ரூ.60 கோடி மோசடி - பின்னால் இருந்த 2 கருப்பு கைகள்..

தந்தி டிவி

தமன்னா முதல் இராணுவ வீரர் வரை.. நாடெங்கும் ரூ.60 கோடி மோசடி - பின்னால் இருந்த 2 கருப்பு கைகள்..

இந்தியா முழுவதும் 60 கோடி ரூபாய்க்கும் மேல் கிரிப்டோகரன்சியில் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை, புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

நடிகைகள் தமன்னா உள்பட பல பிரபலங்களை விழாவில் பங்கேற்க வைத்தும், மும்பையில் கப்பலில் பார்ட்டி எனப் பல வழிகளிலும் பல கோடிகளை ஏமாற்றிய நித்தீஷ் ஜெயின், அரவிந்த் குமார் ஆகிய 2 பேரை கோவையில் வைத்து, புதுச்சேரி சைபர் போலீசார் கைது செய்தனர்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அசோகன் என்பவர், இவர்களிடம் 90 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மற்றும் தனது நண்பர்கள் மூலம் 2.60 கோடி ரூபாயை ASHPAY cryptocurrency என்ற இணையதளத்தில் முதலீடு செய்து இழந்துவிட்டதாக அளித்த புகாரின் பேரில் நடத்திய விசாரணையில் இந்த மோசடி அம்பலமானது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் 10 பேரை வலைவீசித் தேடி வருகின்றனர். 

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"