சினிமா

ஏன் ராஜினாமா செய்தேன்...? - கே.பாக்யராஜ் விளக்கம்

சர்கார் படப் பிரச்சினை எதிரொலியாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இயக்குனர் பாக்யராஜ் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

சர்கார் படப் பிரச்சினை எதிரொலியாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக இயக்குனர் பாக்யராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, திரைப்பட எழுத்தாளர் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அதில்,

* எழுத்தாளர் சங்கத் தலைவராக போட்டி இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட தான், மனசாட்சியுடன் நேர்மையாக செயல்பட்டு வந்ததாகவும், சர்கார் படப் பிரச்சினைக்கு முன்பு எல்லாம் நல்லபடியாக போய் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

* சர்கார் படப்பிரச்சினையில், கதை திருடப்பட்டதாக புகார் தெரிவித்தவரின் பக்கம் உண்மை இருப்பதாக உணர்ந்த தான், சங்கத்தில் இருக்கும் முக்கிய உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து அந்த பிரச்சினையை நியாயமாக முடித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

* ஆனால், அந்தப் பிரச்சினை மூலம், தான் பல அசவுகரியங்களை சந்தித்ததாகவும், தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக பொறுப்புக்கு வந்ததால் தான் தனக்கு இந்த நிலைமை என்றும் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

* எனவே, திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ள பாக்யராஜ், தேர்தலில் முறையாக போட்டியிட்டு, போதுமான ஆதரவுப் பெற்று மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

* மேலும், சங்கத்தின் நலன் கருதி, சர்கார் படப் பிரச்சினையில் தனக்கு நேர்ந்த அசவுகரியங்களை வெளியில் சொல்ல விரும்பவில்லை எனவும் பாக்யராஜ் கூறியுள்ளார்.

* சர்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸிடம் பலமுறை கெஞ்சியும் அவர் உடன்படாததால், சர்கார் கதையை வெளியில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், அதற்காக பட தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பாக்யராஜ், தனது கடித்தில் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி