சினிமா

வங்காள நடிகையின் பாலியல் புகார்... நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்

தந்தி டிவி

வங்காள நடிகை கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கேரளா இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் பெற்றார்.

மலையாள இயக்குநர் ரஞ்சித், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா புகார் அளித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி கேரளாவிற்கு அழைத்தவர் அத்துமீறியதாக குறிப்பிட்டு இருந்தார். இ-மெயில் வாயிலாக ஸ்ரீலேகா கொடுத்த புகாரில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சூழலில் ரஞ்சித், முன்ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குற்ற பிரிவுகள் ஜாமீனுக்கு உட்பட்ட பிரிவுகளாக இருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை