சினிமா

வங்காள நடிகையின் பாலியல் புகார்... நீதிமன்றம் கொடுத்த ட்விஸ்ட்

தந்தி டிவி

வங்காள நடிகை கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கேரளா இயக்குநர் ரஞ்சித் முன்ஜாமீன் பெற்றார்.

மலையாள இயக்குநர் ரஞ்சித், பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வங்காள நடிகை ஸ்ரீலேகா மித்ரா புகார் அளித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு அளிப்பதாக கூறி கேரளாவிற்கு அழைத்தவர் அத்துமீறியதாக குறிப்பிட்டு இருந்தார். இ-மெயில் வாயிலாக ஸ்ரீலேகா கொடுத்த புகாரில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சூழலில் ரஞ்சித், முன்ஜாமீன் கேட்டு கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வழக்கில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குற்ற பிரிவுகள் ஜாமீனுக்கு உட்பட்ட பிரிவுகளாக இருப்பதால் அவருக்கு முன்ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்