Actress | Police | "கணவனின் சந்தேக டார்ச்சர்.. மாமியார் வீட்டில் கொடுமை.." பிரபல நடிகைக்கு நடந்தது என்ன..?
பிரபல இந்தி சீரியல் நடிகை அதிதி சர்மா, தன் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது மும்பை கோரேகான் காவல் நிலையத்தில் கொடுமைப்படுத்துவதாகப் புகார் அளித்துள்ளார்.... தனது நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் அடித்ததாகவும், நகைகளைப் பறித்துக்கொண்டு துன்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புகாரின் அடிப்படையில் நடிகையின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகிய 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.