Actress | Case Filled | Ashu Reddyதிருமண ஆசை காட்டி லண்டன் இளைஞரை மோசடி செய்ததாக நடிகை மீது பரபரப்பு புகார்
லண்டன் இளைஞரை ஏமாற்றியதாக தெலுங்கு நடிகை அஷு ரெட்டி மீது புகார் தெலுங்கு பிக்பாஸ் பிரபலமான நடிகை அஷு ரெட்டி, லண்டன் வாழ் இந்திய இளைஞரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சுமார் ஒன்பது கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை சத்யநாராயணா அளித்துள்ள புகாரில், தனது மகனிடம் திருமண ஆசை காட்டிய அஷு ரெட்டி, ஐந்து கிலோ தங்கம், விலையுயர்ந்த சொகுசு கார்கள் மற்றும் பல அடுக்குமாடி குடியிருப்புகளைத் தனது பெயரில் எழுதி வாங்கியதா குற்றம்சாட்டியுள்ளார். ஹைதராபாத் போலீசார் இதனைப் பொருளாதாரக் குற்றப் பிரிவின் கீழ் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அஷு ரெட்டி, வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.