திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்,
நடிகை அமலாபால் தனது கணவருடன் சுவாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மன் சன்னதியில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து, அபிஷேகம் மற்றும் ஆராதனையை பார்த்தபின் அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மனை தரிசித்தனர்.
நடிகை அமலாபாலுக்கு, கோயில் சிவாச்சாரியார்கள், மாலைகள் அணிவித்து பிரசாதங்கள் வழங்கினர்.