நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்த பாலியல் புகார் குறித்து விளக்கமளிப்பதற்காக, பெங்களூர் கப்பான் பாக் காவல்நிலையத்தில், நடிகர் அர்ஜூன் ஆஜரானார். அவரிடம் சுமார் 20 நிமிடங்கள் விசாரணை நடத்தப்பட்டது. படப்பிடிப்பின் போது, அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகாரின் பேரில், கப்பன் பாக் போலீசார் FIR பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.