பெரம்பூரில் பலத்த மழையால் சாலையில் தேங்கிய தண்ணீர்
சென்னை பெரம்பூர் பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
பெரம்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதனால்
சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பூர் பி.பி மெயின் ரோடு மற்றும் அதை ஒட்டியுள்ள சுப்பிரமணி தெரு, வடிவேலு பிரதான சாலை உள்ளிட்ட சாலைகளை மழைநீர் சூழ்ந்தது.