TNEB | EB Reading | மின் கட்டண உயர்வு புகார் - விசாரிக்க உத்தரவு
மின் கட்டண உயர்வு புகார் - விசாரணை குழு அமைப்பு மின்சாரக் கட்டண உயர்வு - நுகர்வோர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்கள் மூலமாக பதிவு .... மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் 3.70 லட்சம் மின் இணைப்புகளுக்குக் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பிரச்சினை குறித்து விசாரணை நடத்த மின்சார வாரியத் தலைவர் அருண் ராய் ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி தலைமை பொறியாளர் , கண்காணிப்பு பொறியாளர் , உதவி பொறியாளர் , வருவாய் ஆய்வு குழுவினர் உட்பட பலரும் முறையாக ஆய்வுகளை மேற்கொண்டு மின் கட்டணம் மாறுதல் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு