சென்னை மேற்கு மாம்பலத்தில் மாநகர பேருந்து சென்டர் மீடியனில் மோதி விபத்தில் சிக்கியதில் பயணிகள் காயமடைந்தனர். சென்னை பெசன்ட் நகரில் இருந்து வடபழனி நோக்கி சென்ற 5E மாநகர பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 7 பெண் பயணிகள் காயமடைந்துள்ளனர். பெண் பயணி ஒருவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.