சபரிமலையில் அரசு கூட்டுறவு பால் நிறுவனமான மில்மாவின் போலி நெய் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கேரள பால்வளத்துறை அமைச்சர் பிந்துகிருஷ்ணா திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.சபரிமலையில் மில்மா நிறுவனம் மூலமாக ஒன்றரை லட்சம் லிட்டருக்கு மேல் நெய் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதில் 90 சதவீதத்திற்கும் மேல் போலி நெய் எனவும், 40 சதவீதம் கூடுதலான விலைக்கு இது விற்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.பம்பையில் தரப் பரிசோதனை செய்யப்படாமல் இந்த நெய் சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால், தேவசம் போர்டு மற்றும் மில்மா ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.