பழனி நில மோசடி விவகாரம்.. 2 மணி நேரத்திற்கு மேலாக அனல் பறக்கும் விசாரணை பழனி நில மோசடி - 2 மணி நேரத்தற்கும் மேலாக விசாரணை பழனி கோயில் ரூ. 100 கோடி நில மோசடி வழக்கு சம்பந்தமாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில், பழனி கோயிலின் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து, ஓய்வுபெற்ற தாசில்தார் மாரியப்பன், ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி சின்னச்சாமி மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர் சிவனேசன் ஆகிய நால்வரிடமும் சிபிசிஐடி தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் ஷாஜிதா தலைமையில், அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.