குஜராத்தில் நள்ளிரவில் வெடித்து சிதறிய இ-ஸ்கூட்டர் குஜராத் மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ-ஸ்கூட்டர் திடீரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வசை பகுதியில் உள்ள ஆனந்த் நகரில், கடைக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த பேட்டரியில் இயங்கும் மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து வெடித்தது. வெளியே தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு, எரிந்துகொண்டிருந்த ஸ்கூட்டரை ஓரமாக நகர்த்தி தீயைக் கட்டுப்படுத்தினர்.