டெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை நலம் விசாரித்தார் ஜே.பி.நட்டா டெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். டெல்லி ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போராட்டத்தில் காயமடைந்த காவலர்கள் மற்றும் போராட்டக்காரர்களை ஜே.பி. நட்டா நேரில் நலம் விசாரித்தார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம், ஜே.பி. நட்டா கேட்டறிந்தார்.