சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் உள்ளிட்ட வாகன வசதி மற்றும் மாதாந்திர தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ள திட்டம் குறித்து பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். மக்கள் பணி ஆற்றுவதற்கு வாகனம் அவசியம் என்றும், இந்தத் திட்டத்தின் மூலம் ஊழல் குறைய வாய்ப்புள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர். அதேநேரத்தில், MLA-க்கள் மக்களை நேரடியாக சந்தித்து பணியாற்றுவார்களா என்றும் கேள்வி எழுப்பினர்.