தற்போதைய செய்திகள்

"Fraud No.1.." மொத்த காவல்துறைக்கே அல்வா தந்த தனி ஒருவன்..பிரதமர் அதிகாரி என Z+ பாதுகாப்பு, புல்லட் ப்ரூப் கார்... ராஜ வாழ்க்கை... நாட்டையே கிறுகிறுக்க வைத்துள்ள மோசடி

தந்தி டிவி

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் கிரண் பட்டேல். இவர் பிரதமர் அலுவலகத்தின் யுக்திகள் மற்றும் பிரச்சார குழுவின் கூடுதல் இயக்குனர் என கூறி காவல்துறையை தொடர்பு கொண்டுள்ளார். இதில், கிரண் பட்டேலுக்கு Z+ பாதுகாப்பும், குண்டுகள் துளைக்காத புல்லட் ப்ரூஃப் மற்றும் எஸ் வி யூ வாகனமும் காவல்துறை வழங்கிய நிலையில், கிரேண் பட்டேல் செல்லும் இடத்திற்கெல்லாம் நட்சத்திர விடுதியும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினருடன் சேர்ந்து பல விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்வது போல் கிரண் பட்டேல் கூட்டமும் நடத்திய நிலையில், ஒரு கட்டத்தில் கிரண் பட்டேல் மோசடி பேர்வழி என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, பத்து நாள்களுக்கு முன்பே கிரண் பட்டேலை போலீசார் கைது செய்த நிலையில், இந்த விவகாரத்தை காவல்துறை மூடி மறைத்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில், கிரண் பட்டேலை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, நீதிமன்ற காவலில் விசாரிக்கையில் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை