தற்போதைய செய்திகள்

மதுபானக் கடை பாரில் இளைஞர் சரமாரியாக வெட்டிக் கொலை - திருச்சி சமயபுரத்தில் பரபரப்பு

தந்தி டிவி

சமயபுரத்தை அடுத்த சேனியர் கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் பாபு, சமயபுரம் கோவில் அருகே உள்ள கடை ஒன்றில் மாலை கட்டும் வேலை பார்த்து வந்தார். சமயபுரம் நால்ரோடு அருகே உள்ள மதுபானக் கடை பாரில், பாபு மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை சரமாரியாக வெட்டினர். இதில், பலத்த காயமடைந்து ரத்தம் வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார், கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?